வேலணை சந்தியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

231 0

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை சந்தியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரும், ஊர்காவற்துறை பொலிஸாரும் இணைந்து இன்று மதியம் குறித்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 24 வயதுடைய குறித்த சந்தேகநபரிடமிருந்து 50 கிராம் எடையுடைய கேரள கஞ்சா பொதியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.