அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றது:

231 0

தமிழ் நாட்டு மீனவர்களும் இலங்கை மீனவர்களும் அடிபட்டுச் சாக வேண்டும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றானது எனத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கெ.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஊரைக் கொளுத்தும் ராஜாவுக்கு கொள்ளிக்கட்டை கொடுக்கும் மந்திரி போல இங்கு ஒரு அமைச்சர் இருக்கின்றார். அவர் தான் டக்ளஸ் தேவானந்தா. அவர் வருவார். என்ன செய்ய வேண்டுமென்றே அவருக்குத் தெரியாது. அவர் கதைப்பதும் விளங்காது. இந்த நிலைமையில் தான் நாம் இருக்கின்றோம்.

ஆகவே 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுப் படகு ஒழுங்குபடுத்தல் சட்டம் மற்றும் இழுவை மடி தடைச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக மீனவர்களை நாம் விரோதியாகப் பார்க்கக் கூடாது.

ஒரு பிரச்சினைக்கு ஒரு தீர்வு உண்டு. அதைப் பயன்படுத்தித் தீர்வைக் காண வேண்டும். எமக்கும் தமிழகத்துக்குமான உறவை அறுத்து விட அதிக எண்ணிக்கையான ஆட்கள் உள்ளனர்.

அன்று சந்திரிகா அம்மையார் கடலுக்குள் மீனவர்களை இறங்குவதற்குத் தடை விதித்தார். அப்போது நான் மருத்துவமனையிலிருந்து, மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்றோம். டக்ளஸ் தேவானந்தா அண்மையில் யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் ஆவேசமாகச் செயற்பட்டார். அது கண்டிக்கத்தக்கது.

இதனால் யாழ். கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டம் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது. இப்படி போராட்டங்கள் பல வழிகளிலும் குழப்புவதற்கு இப்படி போராட்டங்கள் பல வழிகளிலும் குழப்புவதற்கு முயற்சித்தனர்.

இதற்கு எதிராக நாம் தெளிவாகச் செயற்பட வேண்டும். திருமண வீட்டில் நான் தான் மாப்பிளை, இறப்பு வீட்டில் நான் தான் பிணம் என்று திரிபவர் தான் டக்ளஸ் தேவானந்தா எனத் தெரிவித்துள்ளார்.