போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது

222 0

1 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படைனரால் நேற்று(13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றத்துக்கு உதவிய நான்கு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  கார் ஒன்றும் கைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பேசாலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்ட 21 மற்றும் 29 வயதுடையவர்களாவர்.

சந்தேகநபர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.