’பல துறைகளிலும் மாஃபியா உள்ளது’

176 0

நிதி ஒழுக்கம் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்காது என்று தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வளர்ச்சியை தடுக்கும் மாஃபியா பல துறைகளில் உள்ளது தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேலும் அவர் தெரிவித்தாவது, கிடைக்கக்கூடிய சிறந்த விருப்பத் தெரிவை முடிவு செய்து அதை மிகவும் பயனுள்ள முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

விலை சூத்திரங்கள் நாட்டுக்கு சிறந்தல்ல எனவும் விலை ஸ்திரத்தன்மைதான் சிறந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த மாஃபியாவால்தான் மின்துறை நெருக்கடி ஏற்படுகிறது என்றும் தானும் மின்சக்தி அமைச்சராக இருந்தபோது இந்த மாஃபியாவை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.