காணாமல் போன மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியது

228 0

கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்கு சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலமும் இன்று  கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நான்கு நாட்களாக காணாமல் போனவர்களை தேடும் பணி இடம் பெற்ற நிலையில் சற்று முன்னர் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

கரை ஒதுக்கியுள்ள சடலங்களை கிளிநொச்சி நீதிபதி முன்நிலையில் அடையாளம் காட்டப்பட்ட பின்னர் சடலங்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இடம் பெறுவதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.