அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்கின்றது- திஸ்ஸ

233 0

download (1)அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்வதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்பட்ட காரணத்தாலேயே, 2001ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ராமஞ்ய பீடத்தின் மாகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, தான் மீண்டும் அரசியலில் முன்னோக்கிச் செல்லப்போவதாக கூறினார்.