ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் இன்றையதினம் மாலை 5.30 மணிமுதல் ஒரு மணிநேரத்துக்கு நான்கு வலயங்களில் மின்வெட்டு அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம், ஏற்கெனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது