பாசிப்பயறு செய்கையை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது!

178 0

நெற்செய்கை மேற்கொள்ளப்படாத பயிர் நிலங்களில் பாசிப்பயறு செய்கையை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன வசதிகள் இன்மையால், சிறுபோகத்தில் நெல் பயிரிட முடியாத நிலங்களில் இடைப் போகத்தின் மேலதிக பயிராகப் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.