ஏலத்தில் கேட்டும் பணத்தை வழங்காமையால் தேங்காய் உற்பத்தியாளர்கள் பாதிப்பு

160 0

கிளிநொச்சி பொதுச் சந்தையில் தேங்காய்க்களுக்காக ஏலத்தில் கேட்டும் பணத்தை வழங்காமையால் தேங்காய் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேங்காய்கள் சந்தைக்கு கொண்டு செல்லும் உற்பத்தியாளர்களிடம் ஏலத்தில் கூறப்படுகின்ற பணம் வழங்கப்படுவதில்லை எனவும் ஒரு ரூபாய் தொடக்கம் இரண்டு ரூபாய் வரை குறைத்தே பணம் வழங்கப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, ஏலத்தில் குறிப்பிடப்படும் பணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு கரைச்சி பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேங்காய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.