நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது

206 0

மஹரமக, நாவின்ன பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டுக்காக இரு நைஜீரிய பிரஜைகள் நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மஹரகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் மஹரகம பொலிஸார் அவர்களை இன்றைய தினம் கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.