தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு 2053 ம் ஆண்டுக்கான நிகழ்வுகள் இன்று லண்டனில் லெஷ்டர் பகுதியில் இடம்பெற்றது .

206 0

நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது, தொடர்ந்து பிரித்தானிய தேசிய கொடியினை தமிழ் கல்விக்கூட மாணவி ஜெனனி ஆனந்தகுமார் அவர்கள் ஏற்றி வைத்தார்கள் தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு லெஷ்டர் பொறுப்பாளர் ஏற்றி வைத்தார்கள் . அகவணக்கத்தினை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் ,நடனம் ,உரைகளை தொடர்ந்து பிரித்தானிய லெஷ்டர் பகுதியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றன.