யாழில் களைகட்டும் பொங்கல் வரவேற்பு!

196 0

இந்துக்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளாம் தைத் திருநாள் எதிர்வரும் 14 ஆம் திகதி மலர்கின்றது.

அதற்கு இணையாக யாழ். மாவட்டத்தில் இந்துக்கள் மிகவும் ஆர்வத்துடன் இன்று தமது மண் மற்றும் அலுமினியத்தால் ஆகிய பொங்கல் பானைகளைகளையும் பொங்கலுக்கு தேவையான இதர பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் காணப்பட்டனர்.

குறிப்பாக யாழ். மாநகர சபைக்குள் உள்ளிட்ட அங்காடி, நகர கடைத் தொகுதிகள் மற்றும் திருநெல்வேலி மத்திய மரக்கறிக்கடைத் தொகுதிகளிலும் பொங்கல் பானைகள், பொங்கலுக்கு தேவையான இதர பொருட்கள் உள்ளிட்ட பட்டாசுப் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.