கவனக்குறைவினால் இருவர் உயிரிழப்பு

136 0

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலியில் இருந்து பரவகும்புக நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வலது பக்கத்திலுள்ள பாதுகாப்பு வேலியில் நேற்று (09) மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டிப்பர் சாரதி கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்கதெனிய – ஆணமடுவ வீதியில் பங்கதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆணமடுவவிலிருந்து பங்கதெனிய நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர்திசையில் வந்த சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.