வங்கியில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடமிருந்து வழிப்பறி!

393 0

யாழ்.நகரிலுள்ள வங்கி ஒன்றில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடமிருந்து வழிப்பறி திருடன் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து 60 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்த முதியவரின் கையில் இருந்த பணத்தையே வீதியில் நின்ற இளைஞன் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளான்.

இவ்வாறு பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிய இளைஞனை அங்கு நின்ற சிலர் விரட்டியபோதும் பிடிக்க முடியவில்லை. இதே நேரம் தப்பியோடிய இளைஞனை அயலில் உள்ள வர்த்தக நிலையங்களின் சீ.சீ.ரி கமரா பதிவுகளின் உதவியுடன் தேடிவருகின்றனர்.