உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் நாமல் ஓயாவைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
உஹன பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க இந்த சோதனை நடவடிக்கை நேற்றைய தினம் பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இன்று (07) 2022.01 அம்பாறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

