ஆறு முக்கிய அமைச்சர்களின் பொறுப்புக்களில் மாற்றம்

167 0

ஜனாதிபதியால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது ஆறு முக்கிய அமைச்சர்களில் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் ராஜாங்க அமைச்சர்களின் பதவிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நேற்றைய தினம் நாடு திரும்பினார்.

அவரது வருகையின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

புதிய ஆண்டில், புதிய மாற்றங்களுடன் புதிய பயணத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, (Gotabaya Rajapaksa) ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சரவை மாற்றமும் இதன் பிரதிபலனே எனக் கூறப்படுகிறது.

இதனிடையே செயற்திறனில் பலவீனமாக இருக்கும் அரசாங்கத்தின் 8 முன்னணி நிறுவனங்களின் தலைமை பதவிகளிலும் மாற்றங்களை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம், புதிய ஆண்டில் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் அடிப்படை நடவடிக்கையாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படடவுள்ளன.