வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீப்பரவல்!

313 0

வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

எரிவாயு கசிவு காரணமாக குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.

இதனால், வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன், தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த தீப்பரவலால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.