யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணனுக்கு எதிராக, இன்று (28) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாநகர சபை முன்றலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் மாநகர சபை உறுப்பினர்களால், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாநகர சபை அமர்வு இடம்பெற்ற போது, மேயரின் ; செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, குறித்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, மாநகர முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ‘மேயரின் அராஜகம் ஒழிக’, ‘சபையின் மாண்பை காப்பாற்று’, ‘வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்காதே’ போன்ற கோஷங்கள், மாநகர சபை உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது.

