தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரை அரங்கம்!

540 0

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரை அரங்கம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (26) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் தலைமையுரையை தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனும் “தமிழர் தாயகப் அபிவிருத்தியில் அரசியலின் வகிபாகம்” எனும் தலைப்பில் சமுக செயற்பாட்டாளர் இ.செல்வின் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, “தமிழ்தேசிய அரசியலில் சிவில் அமைப்புக்களின் வகிபாகம்” எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக்கற்கைத்துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராம் மற்றும் “தமிழ்தேசிய அரசியலில் பூகோள அரசியலின் வகிபாகம்” எனும் தலைப்பில் அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் உரை நிகழ்த்தியுள்ளனர்.

இந் நிகழ்வின் ஆரம்பத்தில் டிசம்பர் 26 வடமாகாண இயற்கை பேரிடர் தடுப்பு தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது.

Gallery Gallery