அறுகம்பை கடலில் நீராடச் சென்ற இளைஞர் கடலில் மூழ்கி மாயம்: தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

459 0

பொத்துவில் அறுகம்பை கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இவர் நேற்று (25) காலை தமது நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக காவல்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

பதுளை, கஹட்டருப்ப பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடற்படை, காவல்துறை விசேட அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து காணாமல்போன இளைஞரை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.