அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கும் மக்கள் விடுதலை முன்னணி

175 0

மக்கள் விடுதலை முன்னணி இன்று(24) நாட்டின் சில பிரதான நகரங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் உரப் பிரச்சினை என்பனவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் பாணந்துறை, காலி, அக்குரஸ்ஸ, பதுளை, குருநாகல், சிலாபம், ரிக்கிலகஸ்கட, பூண்டுலோயா, கதுருஓயா மற்றும் திருகோணமலை முதலான பகுதிகளில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தம் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்தப் போராட்டங்களில் இணைந்துகொள்ள உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது