பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல்.

335 0

இன்று சனிக்கிழமை 18.12.2021 அன்று பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல், நுண்கிருமி தொற்றுக் கட்டுப்பாட்டை பின்பற்றி பிறேமகாவன் தமிழாலய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நகரமக்களால் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டது.

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவைத் தாங்கி, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் உறுதி பூண்டு சுடர் வணக்கம், மலர்வணக்கம் செலுத்தினர்.