யாழ். சங்கானையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

312 0

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை தொட்டிலடி சந்தி பகுதியில் வைத்து 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 320 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சித்தங்கேணி மதுவரி நிலைய உத்தியோகத்தர்களால் இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நபர் முச்சக்கரவண்டியில் கஞ்சாவினை கடத்திச் சென்றபோது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது அவர் பயணித்த முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிறுத்தவுள்ளதாக சித்தங்கேணி மதுவரி நிலையத்தினர் தெரிவித்தனர்.

Gallery