பாதயாத்திரை தொடர்பாக பசில் ராஜபக்ஷ தலைமையில் இரகசியக் கூட்டம்

343 0

basilசிறீலங்கா அரசாங்கத்துக்கெதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால், எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரை தொடர்பாக சிறீலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இரகசியக் கூட்டமொன்றை நடாத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லோகான் ரத்வத்தையின் மகியாவ வதிவிடத்தில் இந்த இரகசியக் கூட்டம் நடைபெற்றது.

குறிந்த இந்தப் பாதயாத்திரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள வேண்டுமெனவும், அதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், அதற்குத் தேவையான நிதியை தாம் வழங்குவதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பெரும்பான்மையான மத்திய மாகாண அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை யெனினும், வீரசிங்க அளுத்கம போன்ற சில வாமாகாண சபை உறுப்பினர்களே கலந்துகெண்டார்கள்.

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணவீர, கெஹலிய ரம்புக்வெல, திலும் அமுனுகம, லோகான் ரத்வத்த உள்ளிட்டவர்கள் இந்த இரகசியக் கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.