மக்களிடம் கப்பம் பெற்ற இராணுவச் சிப்பாய் கைது

398 0

17733_arrested300யாழ்ப்பாணத்தில் இராணுவச் சீருடையணிந்தவாறே மக்களிடம் கப்பம் பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரை யாழ்ப்பாணக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

மாத்தளை ரத்தோட்ட பகுதியைச் சேர்ந்த பியந்த சமிந்த கேவகே (வயது – 34) என்ற குறித்த சிப்பாய், யாழ்.புகையிரத நிலைய வீதியில் நேற்று (திங்கட்கிழமை) மக்களிடம் பணம் பறித்துக்கொண்டிருந்த நிலையில் யாழ்ப்பாணக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

இவர் 2014ஆம் ஆண்டுவரை 4ஆவது கஜபாகு றெஜிமென்டில் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய நிலையில், 2014ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 25ஆம் திகதிக்குப் பின்னர் படைப்பிரிவுக்கு சமூகமளிக்கவில்லை.

இந்நிலையில், குறித்த இராணுவச் சிப்பாய் கடந்த வாரத்திலிருந்து யாழ். நகரத்திலுள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் கப்பம் பெற்று வந்துள்ளார். இச்சம்பவம் யாழ். நகர வர்த்தக நிலையங்களிலுள்ள கமராவில் பதிவாகியுள்ள நிலையிலும் பொதுமக்களின் உதவியுடனும் நேற்று (திங்கட்கிழமை) புகையிரதநிலையப் பகுதியில் கப்பம் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.