வடமாகாண சபையை முற்றுகையிட்ட கடற்தொழிலாளர்கள்

401 0

IMG_1958இலங்கை, இந்திய இழுவை படகு மீன்பிடியினைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு முன்பாக இன்றைய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள மாகான சபையின் பேரவைக்கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.

அதன் போது முதலமைச்சர் , மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

அதன் போது மத்திய அரசாங்கம் மற்றும் தமிழக மாநில அரசாங்கம் ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுத்து இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.