முல்லைலைக் கடற்கரையில் இறந்து ஒதுங்கின 5 டொல்பின்கள்!

211 0

முல்லைத்தீவு அளம்பில் கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் 5 டொல்பின்கள் நேற்றுக்கரை ஒதுங்கியுள்ளன.

குறித்த டொல்பின்கள் உயிரிழப்பு குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு அடக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில், செம்மலை, கொக்கிளாய் கடற்கரை பகுதிகளில் கடந்த காலங்களிலும் உயிருடன் டொல்பின் வகை கடல்வாள் உயிரினங்கள் கரை ஒதுங்கியுள்ளன.