பூநகரி – மண்ணித்தலை சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பம்

323 0

பூநகரி – மண்ணித்தலை சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பூநகரி மண்ணித்தலை சிவாலயம் 1990ஆம் ஆண்டு அழிவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பேணி பாதுகாத்து வந்த நிலையில் , அதனை மீளுருவாக்கம் செய்வதற்கு தற்போது, இலங்கை தொல்லியல் திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதனை அடுத்து தொல்லியல் ஆய்வு உத்தியோகஸ்த்தர் வி.மணிமாறனின் நெறிப்படுத்தலில் , தொல்லியல் அதிகாரிகளின் மேற்பார்வையிலும் மீளுருவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் ஆசிரியர்கள் , மாணவர்களும் முக்கிய பங்கேடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.