கொரோனாவால் ஜிம்பாப்வே நாட்டில் கோர்ட்டுகள் மூடல்

187 0

கடந்த ஜூலை மாதம் இதே ஜிம்பாப்வே நாட்டில் கோர்ட்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதித்ததால் அரசியல் சாசன கோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, தொழிலாளர் நல கோர்ட்டு ஆகியவை 2 நாட்கள் மூடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்னொரு பக்கம், உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானும் இந்த நாட்டில் கால் பதித்துள்ளது. இந்த நிலையில் அங்கு கோர்ட்டுகளில் பணியாற்றி வருகிற பல ஊழியர்களையும், அதிகாரிகளையும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனால் அங்கு கோர்ட்டுகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதுபற்றி அந்த நாட்டின் நீதித்துறை பணிகள் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் கொரோனா தொற்று பரவல் தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற வேண்டி இருக்கிறது. இத்துடன் கொரோனா பரிசோதனைகளையும், பாதிக்கப்பட்டோர் தொடர்பு தடங்களையும் அறிய வேண்டியதிருக்கிறது. இதனால் கோர்ட்டுகள் அனைத்தும் 2 நாட்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் வெள்ளிக்கிழமை (இன்று) கோர்ட்டுகள் மீண்டும் செயல்படத்தொடங்கும்” என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இதே ஜிம்பாப்வே நாட்டில் கோர்ட்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதித்ததால் அரசியல் சாசன கோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, தொழிலாளர் நல கோர்ட்டு ஆகியவை 2 நாட்கள் மூடப்பட்டது நினைவுகூரத்தக்கது.