கூட்டு எதிர்கட்சியினரின் பாதயாத்திரை குறித்து கலந்துரையாடல்

343 0

img_14671120942133343340கூட்டு எதிர்கட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று கேகாலையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே பவித்ரா வன்னியாரச்சி மற்றும் ரஞ்சித் சொய்சா ஆகியோர் கலந்துகொண்டிரந்தனர்.

ஜனநாயக உரிமையை நிலைநிறுத்தி விரைவில் உள்ளராட்சி சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை உலகத்திற்கு கொண்டுச் செல்லவும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை உலகத்திற்கு தெளிவுப்படுத்தவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அது தொடர்பிலேயே கலந்துரையாடல் இடம்பெற்றதாக பவித்ரா வன்னியாரச்சி குறிப்பிட்டார்.