எமக்காகவே சிறைச்சாலைகள் – மகிந்த

368 0

52881f287760cதன்னை சுதந்திர கட்சியில் இருந்து விலக்கினால் , தன்னோடு எப்போதும் இருந்த மக்களோடு இணைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேச விகாரையொன்றில் இடம்பெற்ற சமய வழிபாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இதன் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மகன் நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.

சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது எமக்காகவெனவும் , அங்கு செல்ல அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதன் போது தெரிவித்துள்ளார்.