கட்சி அரசியல் பேதமின்றி செயற்பட தயார் – அர்ஜுன ரணதுங்க

192 0

எதிர்காலத்தில் கட்சி அரசியல் பேதமின்றி, நாட்டின் நலன் கருதி செயற்பட தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அஸ்கிரிய மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கட்சி அரசியலே நாட்டை வீழ்ச்சி பாதைக்கு இட்டுச் செல்கிறது. ஒவ்வொரு கட்சிகளிலும் ஒவ்வொரு கொள்கை பின்பற்றப்படுகின்றது.

தாம் அனைத்து கட்சிகளிலும் அங்கம் வகித்ததாகவும் தற்போது கட்சி அரசியலில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.