தென்மராட்சி மட்டுவில் வீதியில் விபத்து ஒருவர் பலி (காணொளி)

288 0

jயாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் வீதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புத்துர் கிழக்கு ஊறணியைச் சேர்ந்த 25 வயதுடைய செல்லமுத்து சுரேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்துர் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் வீதியினூடாக உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் வீதிச்சமிக்ஞை கம்பத்துடன் மோதி வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளர்.

விபத்தின் போது காயமடைந்தவர்களை வைத்தியாலைக்கு கெண்டு சென்ற வேளை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.