கைதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது சிறைச்சாலை

259 0

gitmo-1வட கிழக்கு பிரேசில் நகரான நாட்டல் நகரத்தில் உள்ள மிகப்பெரிய சிறைக்கூடமான அல்காகூஸ் கைதிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

சிறையடைக்கப்பட்டிருந்த இரு குழுக்களுக்கு இடையே ஆரம்பமான மோதல் காரணமாக குறைந்தது 10 கைதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறைக்கூடத்தின் உள் மேலும் கைதிகள் பலியாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் இந்த சிறைச்சாலையில் இடம்பெற்ற மூன்றாவது பாரிய மோதல் சம்பவம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியான மோதல் ஒன்றில் சுமார் நூறு கைதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.