காதல் விவகாரம் – மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

425 0

death 545ddeமன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கின்ற வவுனியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா தவசிக்குளம் பகுதியை சேர்ந்த 18 வயதான ரி.வினோத் என தெரிய வந்துள்ளது.

குறித்த மாணவன் மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் சக நண்பர்களுடன் வாடகைக்கு தங்கியிருந்து உயர்தரத்தில் கல்வி கற்றுவந்தார் என தெரிய வருகின்றது.

சம்பவ தினமான நேற்று இரவு குறித்த மாணவன் சக நண்பரான மாணவருடன் மது போதையில் குறித்த வீட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்ட்ட குறித்த மாணவன் காதல் தோல்வியின் காரணமாக உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாகவும், இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது குறித்த மாணவனின் சடலத்தை மீட்ட மன்னார் காவல்துறையினர் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த வீட்டின் உரிமையாளர்களிடம் மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.