கிணற்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

320 0

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையிலே அவரது சடலம் இன்று உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸாரினால்  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச்சடலம் மீதான பிரேத உடற்கூற்று பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரமோகன் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.