நாவலர் சிலை திறந்து வைப்பு

154 0
யாழ். மாநகர சபையின் உறுதுணையுடன், சைவ மகா சபையால், நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை, இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.

கார்த்திகை தீபத் திருநாளில் இன்று காலை 10.30 மணியளவில் இறைவணக்கம் செலுத்தப்பட்டு, நந்திக்கொடி ஏற்றப்பட்டதுடன், நாவலர் பெருமானின் சிலை திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் பிரதி மாநகர ஆணையாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ் மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.