ஹெரோயினுடன் ஐவர் கைது

143 0

காவல்துறையினர் மேற்கொண்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஹெரோயினுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதற்கமைவாக களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட அய்லப்பெரும பிரதேசத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 12 கிராம் 68 மில்லிகிராம் ஹெரோயினுடன் கோரகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கிராண்ன்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாதம்மாவத்தை, தொட்டலங்க ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புகளில் 17 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒருகொடவத்த, கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22, 31 வயதுடைய இருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட துன்கல்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 07 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா, துன்கல்பிட்டிய காவல்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 07 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.