மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

153 0

நுவரெலியா, பொகவந்தலாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரைப் பொகவந்தலாவைப் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 43, 52 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்