மன்னார் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்துக்குரிய யுவதி யாழ்ப்பாணத்தவர் என அடையாளம்!

145 0

மன்னார் பிரதான பாலத்துக்கு அருகிலுள்ள கோந்தைப் பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை(13) அதிகாலை கண்டெடுக்கப்பட்டது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியின் சடலம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த யுவதி கடந்த வியாழக்கிழமை தனது காதலனுடன் மன்னாருக்கு வந்துள்ளார். அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சடலம் தற்போது மன்னார் வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவிருந்தது.