கொழும்பு – கண்டி ரயில் சேவைகள் இரத்து

165 0

சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு கோட்டை – கண்டி மார்க்கத்தில் பயணிக்கும் 8 ரயில் சேவைகளை மறுஅறிவித்தல் வரை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 7.00, பிற்பகல் 3.35, 4.35 மற்றும் 5.10 மணிக்கு கண்டி நோக்கி புறப்படும் ரயில்களும் கண்டியிலிருந்து காலை 4.30, 6.15, 6.30 மற்றும் மாலை 3.00 மணிக்கு புறப்படும் ரயில்களுமே இரத்து செய்யப்பட்டுள்ளன.