15 துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

128 0

பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று (9) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார பணியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மருத்துவ ஆய்வக இராசாயனவியலாளர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், கண் பரிசோதகர்கள், குடும்ப நலத் தாதியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படாமை, தொழில்சார் பட்டப்படிப்பு பதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமை, சுகாதார நிர்வாக சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.