அகலவத்தை பகுதியில் நபரொருவர் மண்வெட்டியால் தாக்கிக் கொலை!

134 0

அகலவத்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பஹல குடலிகம – நேபொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபரொருவர் மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் நேபொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை இன்று (09) மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அகலவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.