கட்டுத்துவக்கு வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

154 0

ஹொரவ்பொத்தானை காவற்துறை பிரிவுக்குட்பட்ட நிக்கவெவ பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தற்போது இவரது சடலம் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்