யேர்மனியில் சென்ற வாரம் பெர்லினில் அமைத்துள்ள வெளிவிவகார அமைச்சுக்கு மனு கையளிக்கப்பட்டது.

641 0

கடந்த 31.10.2021 அன்று முதல் எதிர்வரும் 12.11.2021 வரை ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சாவும் வருகை தந்ததை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் ஸ்கொட்லாந்துக்கு வருகை தந்து, போர்க் குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச வருகையை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினார்கள். அந்தவகையில் யேர்மனியிலும் சென்ற வாரம் பெர்லினில் அமைத்துள்ள வெளிவிவகார அமைச்சுக்கு காலநிலைமாற்ற மாநாட்டில் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சா கலந்துகொண்டதை கண்டித்து மனு கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.