பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் நினைவுசுமர்ந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2021 யேர்மனி

544 0

6.11.2021 சனிக்கிழமை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்கும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஏனைய மாவீர்களுக்கும் விளக்கேற்றி மலர் தூவி விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகியது.

19 வயதிற்குட்பட்ட அணிகளில் 8 கழகங்கள் பங்கெடுத்துக்கொண்டன, 19 வயதிற்;கு மேற்பட்ட அணிகளில் 24 கழகங்கள் பங்கெடுத்துக் கொண்டன. மாவீரர்களின் நினைவுகளை மனங்களில் சுமந்தபடி உதைபந்தாட்டத்தில் கலந்துகொண்ட கழகங்கள் நிதானத்துடன் விளையாடி வெற்றிகளைத் தமதாக்கிக்கொண்டனர்.

19 வயதிற்கு உட்பட்ட அணிகளில்
முதலாவது இடத்தினை

TSV Ennepetal
இரண்டாவது இடத்தினை

Jüchen Kingstars 95
மூன்றாவது இடத்தினை

TSC München
கழகங்களும் பெற்றுக் கொண்டன.

19 வயதிற்கு மேற்பட்ட அணிகளில்

முதலாவது இடத்தினை

MP Bremen
இரண்டாவது இடத்தினை

TSC Dortmund
மூன்றாவது இடத்தினை

KTC Krefeld

கழகங்களும் பெற்றுக்கொண்டன.