சமூக வலைதளத்தில் ஆபாச வீடியோ: டிக்-டாக் பிரபலம் கைது

308 0

தன்னுடைய கணவர் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஆபாசமான வார்த்தைகளால் சித்தரித்து பேசி வீடியோ வெளியிட்ட டிக்டாக் பிரபலம் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த 13-ந்தேதி ஒத்தக்கடையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், தன்னுடைய கணவர் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஆபாசமான வார்த்தைகளால் சித்தரித்து பேசி வீடியோ வெளியிட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் தேனி மாவட்டம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் சுகந்திக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இதற்கிடையே, அவர், சென்னையில் மேக்கப் கலைஞராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் டிக்-டாக் பிரபலம் சுகந்தியை கைது செய்தன