கம்பேர்க் தமிழாலயத்திலும், இராட்டிங்கன் தமிழாலயத்திலும் நடைபெற்ற சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.

274 0
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.
06.11.2020 சனிக்கிழமை இராட்டிங்கன் தமிழாலயத்தில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
2.11.2007ம் ஆண்டு சிறீலங்கா வான்படைகளின் வான்குண்டுத்தாக்குதலில் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். அவர்களின் 14ம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வை பலர் ஒன்றிணைந்து  நினைவுகூர முடியாத கொரொனா நோய்த்தொற்று நிறைந்த சூழலில், தமிழாலய ஆசிரியர்கள் மாணவர்கள்  கொரொனா விதிமுறைகளுக்கு அமைவாக நினைவுகூர்ந்தனர்.