கொவிட் தொற்றால் மேலும் 20 பேர் பலி!

121 0

நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், 10 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 3 ஆண்களும், 3 பெண்களும் என 6 பேர் மரணித்தனர்.

60 வயதுக்கு மேற்பட்ட 7 ஆண்களும், 7 பெண்களும் என 14 பேர் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(05) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,841ஆக அதிகரித்துள்ளது.