தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

220 0

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் படுகொலை நினை வேந்தல் தொடர்பாக முகநூலில் பதிவிட்டது தொடர்பான விசாரணைக்காக நாளை சனிக்கிழமை (6) மட்டக்களப்பு காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சத்துருக் கொண்டானில் படுகொலை செய்யப்பட்ட 185 பேரின் 32 வது நினைவேந்தல் கடந்த செட்டம்பர் மாதம் இடம்பெற இருந்த நிலையில் அங்கிருக்கும் நினைவேந்தல் தூபியில் விளக்கு ஏற்ற அனுமதிக்காத நிலையில் அது தொடர்பாக கிழக்கில் இவ்வாறு அதிகமான படுகொலைகள் நடந்துள்ளது இவற்றுக்கு நீதிவேண்டும் என தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பான வாக்கு மூலம் ஒன்றை பெறவேண்டியுள்ளதால் நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு தலைமையக காவல் நிலைய சமூக காவல்துறை பிரிவிற்கு வருகை தருமாறு இன்று வெள்ளிக்கிழமை (5) மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது வீட்டுக்கு காவல்துறையினர் வந்து கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.

எனவே காவல்துறையினரின் இந்த செயற்பாடு தொடர்பாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.